குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: விருச்சிகம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
எவ்வித பேதமும் இல்லாமல் எல்லோரையும் சமமாக பாவிக்கும் அன்பர் நீங்கள், நாடி வருவோருக்கு இயன்ற உதவிகளைச் செய்து, மகிழ வைக்கும் பண்புடையவர். உங்கள் ராசிக்கு, வரும் மே-11 முதல் (வாக்கியப் படி) 8-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான்.
ஆகவே, ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர் கள். இனம் காண இயலாதபடி இருந்து வந்த தடைகள் நீங்கும்.
எனினும், பிரபல யோகாதிபதி எட்டில் சென்றும் மறைவதால், எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் செயல்படவேண்டும். ஏலச்சீட்டு, மியூச்சல் ஃபண்ட் போன்ற விஷயங்களில், பண-பரிவர்த்தனைகளில் அலட்சியம் கூடாது. அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்வது கூடாது. இவர்களுக்கு இந்தக் காலக்கட்டத்தில், திடீர்ப் பயணங்கள் இருக்கும். அதேபோல், வீண் பழிகள் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால், பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம்.
சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
குரு பகவானின் பார்வை பலன்கள்

குரு பகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தாரின் பூரண ஒத்துழைப்பு, உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு பெருகும். அதே அளவு விமர்சனங்களும் வர வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும்; அதேநேரம் செலவுகளும் உண்டு. உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி நல்லது நடக்கும். அத்தியாவசியப் பொருள்களை வாங்குவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும்.
குரு பகவான் 4-ம் இடத்தைப் பார்ப்பதால், வீடு பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்து வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிதாகபெரிய மனை வாங்கும் வாய்ப்பு டு அவர், புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.
உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். அம்மா வழிச் சொத்து கைக்கு வரும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.
குருபகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு, திடீர்ப் பயணங்கள் கூடிவரும். பயணங்களாலும் பொருள் வரவுக் குச் சாத்தியம் உண்டு. எனினும், புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் கூடாது.
வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படியாக வரவழைப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வற்றை முறையே செலுத்தி விடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலர், பழைய கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். எனினும் அவரிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம்.
புது வேலை வாய்ப்பு கிடைத்தால், யோசித்துச் செயல்படுவது நல்லது. கணினித் துறையினர், உற்சாகத்துடன் காணப்படுவார்கள். சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களே ! உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.
பரிகாரம்:
சென்னை – மாமல்லபுரம் செல்லும் சாலையில் 42-வது கி.மீ அமைந்துள்ளது. திருப்போரூர். முருகன், ஆகாயத்தில் போர் புரிந்த தலம் இது என்கின்றன புராணங்கள். சஷ்டி தினங்களில் குடும்பத்துடன் இத்தலத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். தினமும் வீட்டில் குமார ஸ்தவம் துதிப்பாடல் படித்து, நெய்தீபம் ஏற்றிவைத்து கந்தக் கடவுளை வணங்குங்கள், சகல நலன்களும் உண்டாகும்.