குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: கும்பம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
மற்றவர்கள் செய்ய தயங்கும் சுடினமான செயல்களையும் தைரியமாக முன்வந்து கையில் எடுத்து, அதில் வெற்றி பெறும் சாமர்த்தியசாலிகள் நீங்கள். உங்கள் ராசிக்கு, வரும் மே-11 முதல் (வாக்கியப்படி) 5-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் குருபகவான்.
இதுவரையிலும் 6-ல் அமர்ந்து, பல சிரமங்களை அனுபவிக்க வைத்த குருபகவான், இனி பல்வேறு யோகங்களை அருளப் போகிறார். மன நிலை, குணநிலை, உடல்நிலை அனைத்து வகையிலும் சந்தோஷம் உண்டு, பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். செல்வாக்கு, சொல்வாக்கு கூடும். கோர்ட் வழக்குகள் சாதகமாகும். சொத்துப் பிரச்னையில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தடைகள் நீங்கி, மகளின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரங்களை மீட்டெடுப்பீர்கள். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு
இனி, உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் தீரும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், எதையோ இழந்ததைப் போல் இருந்த உங்கள் முகம், இனி மலர்ச்சி அடையும். செயல்களில் புது உத்வேகம் பிறக்கும். வி.ஐ.பிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டா கும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தோற்றப்பொலிவு கூடும்.
9-ம் இடத்தை குரு பார்ப்பதால், தந்தையின் உடல்நிலை சீராகும். தந்தையுடன் கருத்து கருத்து. வேறுபாடுகள் நீங்கும். அவர்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. அவர் வழிச் சொத்துகள் கைக்கு வரும். எல்லா விஷயங்களிலும் செல்வாக்கு உண்டு. இதுவரை வறண்டுகிடந்த பணப்பை, இனி நிரம்பும். சேமிக்கும் அளவுக்கு பொருள் வரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
லாபஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தொழில்-பாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். புது முதலீடுகள் செய்வீர்கள். புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். அவர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். கனவுத்தொல்லை, ததூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப் புடவை, தங்க ஆபரணம் வாங்கித் தருவீர்கள். அரசியவாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள்.
வியாபாரத்தில் புதிது புதிதாக வந்த போட்டி யாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே…இனி, அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். ஜூலை மாதத்துக்குப் பிறகு, புதிய முதலீடுகள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். கணினி, உணவு, எண்டர்பிரைசஸ், கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்தியோகத்தில் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள், இனி நட்புறவாடுவார்கள். வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடன் பனிப்போர் நீங்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு, அரசாங்கப் பரிசு கிடைக்கும்.
பரிகாரம்;
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண் டம் அருகிலுள்ள ஆழ்வார் திருநகரி, நவ திருப்பதிகளில் குருவுக்கு உரிய தலமாகும். இங்கு அருளும் ஆதிநாத பெருமாளுக்குத் துளசி சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். இன்னல்கள் நீங்கி, சகல சம்பத்துகளும் உண்டாகும்; எதிர்காலம் சிறக்கும்.